அயோக்கிய சிகாமணி அருகோ-வின் அண்ட புளுகும் ஆகாசப் புளுகும் (eBook)
34 Seiten
Logital Media (Verlag)
978-0-00-012244-5 (ISBN)
இந்நூல் 2013 இல் திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய இலக்கிய இலக்கணத் தொடர் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. இந்நூலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கிய போது, அன்று அந்நூலைப் படித்துவிட்டு மறுநாள் என்னை விடயபுரம் என்ற ஊரில் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் என்று பாராட்டினார். கீற்று இணையத் தளத்திலும் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. மீண்டும் பெரியாரை அவதூறு செய்வதிலேயே சில குழுக்கள் முனைந்திருப்பதால் இந்நூல் இரண்டாம் பதிப்பாக இப்போது வெளிவருகிறது.
காலை 10 மணி. ஈருருளையில் (சைக்கிளில்) நேராக சக்தி மணிப்பொறி யகத்துக்குச் சென்றேன் (சக்தி வாட்ச் கம்பெனி). ஈருருளையை நிறுத்தியவுடன், வாங்கய்யா! என்றார் சக்தி. வணக்கமண்ணே! என்று கூறியவாறு கடைக்குள்ளே சென்றேன்.
கடைக்குள் எப்போதும் பல தரப்பட்ட தமிழின உணர்வார்கள் வருவார்கள். கலந்துரையாடுவார்கள். சக்தியும் அதில் கலந்து கொள்வார். வாடிக்கையாளர்கள் வரும்போது அவர்களைக் கவனித்துக் கொண்டே சில நேரங்களில் எங்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்வார்.
அப்போது தமிழாசிரியர் ஒருவர் வந்தார். சக்தி, ‘வாங்கய்யா!’ என்றார். நானும் ‘வணக்கமய்யா!’ என்றேன். அவரும் ‘வணக்கம்’ என்று கூறிக் கொண்டே கடைக்குள் வந்து என் அருகில் அமர்ந்தார். கையில் ஒரு பொத்தகம் வைத்திருந்தார்.
‘அது என்ன நூல் அய்யா’ என்றேன். ‘எழுகதிர்’ என்று கூறியவாறே என்னிடம் கொடுத்தார். அப்போதே அந்நூலை ஒரு புரட்டு புரட்டினேன். பிறகு நானே பேச்சைத் தொடங்கினேன். ‘அருகோ எப்போதும் பெரியாரைப் பற்றி அவதூறைக் கிளப்பிக் கொண்டே இருக்கிறார். பலமுறை விடை கூறிய பின்பும் அதே அவதூறை அவர் செய்து கொண்டிருக்கிறார்’ என்றேன்.
‘என்ன அவதூறய்யா?’ என்றார் தமிழாசிரியர்.
காலையில் ‘தமிழர் கழகம்’ என்றிருந்த தீர்மானத்தை மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று ஈ.வெ.ரா. மாற்றினார் என்று அவதூறாக எழுதியிருக்கிறார். ஏற்கனவே பல முறை இம்மாதிரியாக எழுதியிருக்கிறாரு! அதற்கு பலமுறை விடையும் சொல்லியாச்சய்யா! என்றேன்.
‘அது உண்மைதானய்யா?’ என்றார் தமிழாசிரியர்.
நான், ‘அது உண்மை இல்லை அய்யா. இப்ப பாருங்கய்யா. இந்த ‘எழுகதிர்’ல (மார்ச்சு 2013) ‘கோவிலூரான்’ என்கிற தலைப்புல ஒரு கட்டுரை வந்திருக்கு. அதில, ‘உள்ளபடி 1944 ஆகஸ்ட் திங்களில் நடைபெற்ற சேலம் மாநாட்டின் காலை நிகழ்ச்சியில் ‘தமிழர் கழகம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அன்று மதியம் நடந்த சமபந்தி விருந்தின் போதுதான் சி.பி.சிற்றரசு (சின்ராசு), டார்பிடோ சனார்த்தனம் ஆகிய இரு தெலுங்கர்கள் பெரியாரை நோக்கி, ‘நீர் கன்னட பலிஜா நாயுடு. நாங்கள் தெலுங்கு பலிஜா நாயுடு. நாமும் ஒன்று சேர்ந்து ‘தமிழர்கழகம்’ என்று கட்சியின் பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழக்கமிட்டால், நாளை ஒருவேளை தனித்தமிழ்நாடு அமையுமானால், இது தமிழருக்கு மட்டும்தான். தமிழரல்லார் வெளியேறுங்கள் என்று சொன்னால் நாம் என்ன ஆவோம்?’ என்று மடக்க, பெரியாருக்கு உள்ளபடியே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதில் நம்பிக்கையிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? என்னை விட யாரடா தமிழர்? என்று சொல்லி அவர்களை விரட்டியிருக்க வேண்டும்’.
‘ஆனால் என்ன செய்தார். காலைத் தீர்மானத்தை என்னால் மாற்ற இயலாது. அண்ணாத்துரையைப் போய்ப் பிடியுங்கள். அவர் சொல்லுக்குத்தான் இந்த முட்டாள் கூட்டம் மகுடி முன் நாகம் போல் மயங்கிக் கிடக்கிறது. கட்டுப்படும் என்று சொல்ல, அவர்களும் அண்ணாவைப் போய்ப் பார்த்து, ‘தமிழர் கழகம்’ எனும் பெயரையும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தையும் மாற்ற நீங்கள் தான் வழி செய்ய வேண்டும் என்று கூற, அவரால் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டதுதான் ‘திராவிடர் கழகம்’ ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற தீர்மானம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இது போன்று ‘தென்மொழி’யில் அருகோ கட்டுரை எழுதினார். பிறகு ‘நாம் தமிழர் கட்சி’யின் ஆவணத்தில் இதே அவதூறை கூறியிருந்தார்கள். அதற்கு ‘திராவிடர் விடுதலைக் கழக’த் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள், ‘பொய்யர்கள் இந்தப் புளுகை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறி, ‘1944 - இல் பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பே ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ (நீதிக்கட்சி), ‘திராவிடர் சங்கம்’ என்ற பெயரில்தான் தொடங்கப்பட்டது என்பதையும், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கிளைகள் ‘இராயப்பேட்டை திராவிடர் சங்கம்’, ‘ஜார்ஜ் டவுன் திராவிடர் சங்கம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது என்பதையும் அதற்கு முன்பாக 1892-இல் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘ஆதி திராவிட மகாஜன சபை’ 1894- இல் ‘திராவிட மகாஜன சபை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்றும் பல செய்திகளை எழுதியிருந்தார்’.
‘இருந்த பின்னும் மீண்டும்...
| Erscheint lt. Verlag | 2.11.2018 |
|---|---|
| Sprache | Tamil |
| Themenwelt | Kunst / Musik / Theater ► Malerei / Plastik |
| ISBN-10 | 0-00-012244-0 / 0000122440 |
| ISBN-13 | 978-0-00-012244-5 / 9780000122445 |
| Informationen gemäß Produktsicherheitsverordnung (GPSR) | |
| Haben Sie eine Frage zum Produkt? |
Größe: 678 KB
Kopierschutz: Adobe-DRM
Adobe-DRM ist ein Kopierschutz, der das eBook vor Mißbrauch schützen soll. Dabei wird das eBook bereits beim Download auf Ihre persönliche Adobe-ID autorisiert. Lesen können Sie das eBook dann nur auf den Geräten, welche ebenfalls auf Ihre Adobe-ID registriert sind.
Details zum Adobe-DRM
Dateiformat: EPUB (Electronic Publication)
EPUB ist ein offener Standard für eBooks und eignet sich besonders zur Darstellung von Belletristik und Sachbüchern. Der Fließtext wird dynamisch an die Display- und Schriftgröße angepasst. Auch für mobile Lesegeräte ist EPUB daher gut geeignet.
Systemvoraussetzungen:
PC/Mac: Mit einem PC oder Mac können Sie dieses eBook lesen. Sie benötigen eine
eReader: Dieses eBook kann mit (fast) allen eBook-Readern gelesen werden. Mit dem amazon-Kindle ist es aber nicht kompatibel.
Smartphone/Tablet: Egal ob Apple oder Android, dieses eBook können Sie lesen. Sie benötigen eine
Geräteliste und zusätzliche Hinweise
Buying eBooks from abroad
For tax law reasons we can sell eBooks just within Germany and Switzerland. Regrettably we cannot fulfill eBook-orders from other countries.
aus dem Bereich