மரணதண்டனையை ஒழிப்போம்! (eBook)
54 Seiten
Logital Media (Verlag)
978-0-00-012232-2 (ISBN)
தமிழ்நாடு அரசு தண்டனைக்குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும்!
கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி!
தமிழக முதல்வருக்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர் உருக்கமான கடிதம்
அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு
தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன்
முடிவுறாத விசாரணை
பொருளடக்கம்
1. தமிழ்நாடு அரசு தண்டனைக்குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும்!
2. கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப்பட்ட நீதி!
3. தமிழக முதல்வருக்கு வி.ஆர்.கிருஷ்ணய்யர் உருக்கமான கடிதம்
4. அப்சல்குருவை தூக்கில் போட காங்கிரசில் எதிர்ப்பு
5. தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன்
7. 2 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நிறைவேற்றப்படாத தூக்குத் தண்டனைகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!
8. தூக்குத் தண்டனை: சில வரலாற்றுத் தகவல்கள்
9. யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்?
- தமிழ்நாடு அரசு தண்டனைக்குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும்!
மூவரின் மரணதண்டனையை நிறுத்தவேண்டும்!
தோழர் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை விண்ணப்பத்தை மத்தியஅரசு நிராகரித்து அவர்களுக்கு மரண தண்டனையை உறுதிசெய்திருக்கிறது.
உலகம் முழுவதும் மரணதண்டனை என்ற சட்டப் பிரிவினையே சட்டப்புத்தகத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்ற முழக்கம் ஓங்கி ஒலித்துவரும் இவ்வேளையில் மரணதண்டனை தொடர்பான சில செய்திகளை கருதிப்பார்க்கவேண்டும்.
உலகின் 193 நாடுகளில் 95 நாடுகள் மரண தண்டனை என்பதையே முழுமையாகக் கைவிட்டு விடப்பட்டுள்ளது. 8 நாடுகளில் போர்க்காலத் துரோகக் குற்றங்களுக்கு மட்டுமே என வைத்துள்ளனர்.
49 நாடுகள் சட்டத்தை வைத்திருந்தாலும் கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக பயன்படுத்தாமல் உள்ளனர். வெறும் 41 நாடுகள் மட்டுமே சட்டத்திலும் பயன்பாட்டிலும் வைத்துள்ளன. அந்நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்றாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 15 ஆண்டுகளுக்கு மேலாக யாருக்கும் அத் தண்டனை நிறைவேற்றப் படாமல்தான் உள்ளது.
1860 இல் இந்திய தண்டனைச்சட்டம் உருவாக்கப்பட்ட போது கொலை (302), மரணதண்டனை பெறும் அளவிலான பொய்சாட்சி (194) போன்ற குற்றங்களுக்கு சட்டப்படி மரணதண்டனை என எழுதப்பட்டது.
அதற்குப் பின்னால் 1956 இல் அவ்வகைக் குற்றங்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை ஏதேனும் ஒன்றை காரணங் களோடு வழங்கலாம் என்று ஒரு மாற்றம் வந்தது. ஆனாலும் மரண தண்டனையே அதிகமாக வழங்கப்பட்டுவந்தது.
அதன்பிறகு 1973 இல் மேற்கண்ட குற்றங்களுக்கு ஆயுள் தண்டனைதான் வழங்க வேண்டும் என்றும் விதிவிலக்கான வழக்கு களில் மரணதண்டனை விதிக்கலாம் என்ற மாற்றம் வந்தது.
1980 இல் பச்சான்சிங் வழக்கில் அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டும், அதுவும் அதன் சிறப்புத் தன்மையைப் பதிவுசெய்து விட்டுத்தான் மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்ற மாற்றம் வந்தது.
இந்நிலையில் தேசத்தந்தை என காங்கிரசாரால் அழைக்கப்படும் காந்தி அவர்கள், கடவுள் கொடுத்த உயிரைப் பறிப்பதற்கு மனிதனுக்கு உரிமை இல்லை என்றும், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது போன்ற காட்டுமிராண்டிகால நடைமுறை இந்த நாகரிகக் காலத்துக்குப் பொருந்தாது என்றும் தொடர்ச்சியாக கூறிவந்ததை நினைவில் கொள்ளவேண்டும்.
தண்டனையை உறுதிசெய்த உச்சநீதி மன்றம்கூட இதை ஒரு ‘பழிவாங்கல்’ என்று மட்டுமே கருத்துக் கூறுவதோடு, வேறு எவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் குற்றவாளிகளுக்கு இருக்க வில்லை என்றுகூறி, இதில் ‘பயங்கரவாதம் இல்லை’ என்கிறது. அதே சமயம் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1979 இல் அயர்லாந்தில் கொலை செய்யப் பட்டபோது அக்கொலையில் நேரடியாக ஈடுபட்ட குற்றவாளிகளுக்கே டப்ளின் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனைதான் வழங்கப்பட்டது என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் குற்றமிழைத்ததாகவே வைத்துக்கொண்டாலும்கூட நேரடியாகக் கொலையை நிறைவேற்றிய வர்கள் இவர்கள் அல்ல. உதவி செய்தவர்கள் மட்டுமே. உச்சபட்ச தண்டனைக்குரியவர்கள் இறந்துவிட்ட நிலையில் உதவிசெய்ததாகக் கூறப்படும் இவர்களுக்கும் உச்சபட்ச தண்டனையை வழங்குவது நீதி அல்ல என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்த பிறகும் கேரள அரசின் உறுதியான வலியுறுத்தலால் சி.ஏ.பாலனின் மரணதண்டனை...
| Erscheint lt. Verlag | 31.10.2018 |
|---|---|
| Sprache | Tamil |
| Themenwelt | Kunst / Musik / Theater ► Malerei / Plastik |
| ISBN-10 | 0-00-012232-7 / 0000122327 |
| ISBN-13 | 978-0-00-012232-2 / 9780000122322 |
| Informationen gemäß Produktsicherheitsverordnung (GPSR) | |
| Haben Sie eine Frage zum Produkt? |
Größe: 118 KB
Kopierschutz: Adobe-DRM
Adobe-DRM ist ein Kopierschutz, der das eBook vor Mißbrauch schützen soll. Dabei wird das eBook bereits beim Download auf Ihre persönliche Adobe-ID autorisiert. Lesen können Sie das eBook dann nur auf den Geräten, welche ebenfalls auf Ihre Adobe-ID registriert sind.
Details zum Adobe-DRM
Dateiformat: EPUB (Electronic Publication)
EPUB ist ein offener Standard für eBooks und eignet sich besonders zur Darstellung von Belletristik und Sachbüchern. Der Fließtext wird dynamisch an die Display- und Schriftgröße angepasst. Auch für mobile Lesegeräte ist EPUB daher gut geeignet.
Systemvoraussetzungen:
PC/Mac: Mit einem PC oder Mac können Sie dieses eBook lesen. Sie benötigen eine
eReader: Dieses eBook kann mit (fast) allen eBook-Readern gelesen werden. Mit dem amazon-Kindle ist es aber nicht kompatibel.
Smartphone/Tablet: Egal ob Apple oder Android, dieses eBook können Sie lesen. Sie benötigen eine
Geräteliste und zusätzliche Hinweise
Buying eBooks from abroad
For tax law reasons we can sell eBooks just within Germany and Switzerland. Regrettably we cannot fulfill eBook-orders from other countries.
aus dem Bereich